31 December 2010

நமது வாழ்வில் உணர்ச்சிகள் எந்த அளவுக்குத் தேவை? அ‍வை எப்போது ஆபத்தானவையாக மாறுகின்றன?


"எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுகிறாயே" என்று நாம் பலரைப் பார்த்துச் சொல்கிறோம்.  பலரும் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள்! அப்படியானால் உணர்ச்சிகள் கூடாதா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அது உணர்ச்சிக்கும் பொருந்தும்.feeling
உணர்ச்சியில்லாமல் வாழ்வில்லை. ஆசை, காதல், ‍அன்பு, இரக்கம், கோபம், பயம்! இப்படி எல்லாவகை உணர்ச்சிகளும் கலந்ததுதான் வாழ்க்கை! ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உணர்ச்சிக்கு நாம் ஆட்படுவோம்! அது இயற்கைதான்!
ஆனால், 'என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்' என்று நாம் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது.
உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக்கூடாது. அவை நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.
விலங்கினங்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுத்தான் வாழ்கின்றன. கோபமும் (முடிந்ததால் மோது)பயமும்தான் (முடியாவிட்டால் ஓடு) விலங்குகளின் அடிப்படை உணர்ச்சிகள்!
விலங்குகளின் மூளையில் அமிகதலா என்ற ஒரு பகுதிதான் இந்த உணர்ச்சிகளின் பிறப்பிடம். னம்முடைய மூளையிலும் இதே பகுதி இருக்கிறது. அதைப் போலே செயல்படுகிறது!
ஆனால் நமது மூளையில் நிதானமாக, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுதிகள் நன்றாகவே வளர்ந்திருக்கின்றன. "நமக்கு நினைவாற்றலும் மிகுதி! ஆனால் ஒன்று இந்த அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வழிகாட்டும் பகுதி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படும்"
முதலில் கோபம்! அப்புறம்தான் யோசனை! முதலில் பயம்! அப்புறம்தான் நிதானம்! முதலில் அடிதடி! அப்புறம் வாழ்நாளெல்லாம் வருத்தம்!
நாம் உணர்ச்சிவசப்படும் போது, அதற்கு ஏற்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, கேட்கும் போது, கொஞ்சம் நிதானம் காட்டப் பழக வேண்டும். சில நிமிடங்கள் இடைவெளி கி‍டைத்தால் கூட போதும். நமது மூளை ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கிவிடும்.
ஆனால், அந்த ஒரு சில நிமிட நிதானத்தை நாம்தான் பழகிக்கொள்ள வேண்டும். இதைத்தான் உணர்வுப் பக்குவம் (Emotional Maturity) என்கிறார்கள்.
வயது ஆக, ஆகத்தான் இப்படிப்பட்ட பக்குவம் எல்லாம் வரும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
இன்று உளவியல் மிக ‍வேகமாக வளர்ந்திருக்கிறது! சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்வுப் பக்குவத்தைப் பழகிக்கொள்ள இன்று வழி இருக்கிறது.
இதைப்பற்றி இன்று ஏராளமான செய்திகள்! ஆராய்ச்சிகள்! வானொலி! தொலைக்காட்சி உரைகள்! எனவே இதை நாம் இங்கே மேலும் விவரிக்கத் தேவையில்லை!
ஆனால் ஒரே ஒரு அடிப்படைப் பாடத்தை மட்டும் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோம்.
எந்த உணர்வானாலும் சரி, அதிக ஆழமாக, அதிகக் காலம் அகப்பட்டுக் கொண்டு அடிமையானால் அதனால் ஆழமான மனக்காயங்களும் தீய விளைவுகளும் உருவாகும்.
எவர் மீதும் அதிகமாகக் கோபப்படாதீர்கள்! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மன்னித்து மறந்துவிடுங்கள்!
எவருக்கும், எதற்கும் அளவுக்கு மீறிப் பயப்படவேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பயத்திலிருந்து விலகித் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எதன்மீதும், எவர்மீதும் அளவுக்கதிகமான பகையையோ, பொறாமையையோ வளர்த்துக்கொள்ள வேண்டாம்.  ஏன் அளவுக்கதிகமான வெளித்தனமான அன்புகூட ஆபத்தானதுதான்.
மற்றவர்களை மட்டுமன்று, நம்மையே நாம் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
நமது கடந்த காலத் தவறுகளையும் ஏமாளித்தனங்களையும் நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. ஏராளமான மன நோயாளிகள் இன்னும் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!
மொத்தத்தில் நமது மனம் மிகையான உணர்ச்சிகளில் அழுத்திக் கடினப்பட்டுக் போகாமல் காப்பாற்றிக்கொள்வோம்! நமது மனம் கல்லாக உணர்ச்சிகளால் இறுகிப் போக வேண்டாம்.  மெல்ல மெல்ல கனமில்லாமல், மென்மையாகக் கனியட்டும். சுமையில்லாத வாழ்வுக்கு சுலபமான வழி இது!

24 December 2010

ஓவ்வொருவருக்கும் உளவியல்


மன நோயாளிகளைப் பற்றிய நமது சமூகப் பார்வை மிக மிகத் தவறானதாகவே இருக்கிறது. நம் சொந்தக் குடும்பத்தைச் ‍சேர்ந்த மன நோயாளிகளைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அவர்களை மதிப்பதில்லை. மன நல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதில்லை. அவர்களைக் கட்டிபோட்டுத் துன்பைறுத்துகிறோம்! அடித்து உதைக்கிறோம். கடவுள் முன் அவர்களைக் கட்டிப்போட்டு வதைக்கிறோம்.CMHRimage
இந்த மனப்பாங்கு மாற வேண்டும். உண்மையில் மன நோயும் ஒரு வகை உடல் நோய்தான். நரம்பு மண்டலக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்! மருந்து, மருத்துவம், அன்பு, பாதுகாப்பு மூலம் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்த முடியும். மனநோயாளிகளில் மிகமிகச் சிறிய சதவிகிதத்தினர் மட்டும்தான் முரட்டுத்தனமாகச் செயல்படுவார்கள்.  இவர்களை மருத்துவ மனைகளில் வைத்துக் குணப்படுத்தலாம்.
மூளை, நரம்பியல் குறைபாடுகள் இன்று எல்லாத்தரப்பு மக்களிடையிலும், எல்லா வயதிலும் கண்டறியப்படுகின்றன. மருத்துவம் மூலம் சரி செய்யப்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்! தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள்! நினைவாற்றலை இழக்கும் முதியவர்கள்! இவர்களுக்கெல்லாம் இன்று உளவியல் துணை நிற்கிறது!
இப்படிப்பட்ட நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உளவியலா? இல்லை, எல்லோருக்குமா?
நம் ஒவ்வொருவருக்கும் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அ‍‍தேபோல் மன நலமும் முக்கியம்!
உடல் நலத்தைப் பாதுகாக்க பல வழிகள் இருப்பதுபோல் மன நலத்தைப் பாதுகாக்கவும் பல வழிகளை நமது முன்னோர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இறை வழிபாடு நமது மன நலத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது!‍தோல்வியையும் துன்பத்தையும் கண்டு துவண்டு போகாமலிருக்க வழிபாடு துணை நிற்கிறது!
வெற்றிக் களிப்பில் வரும் ஆணவத்தால் நாம் அழிந்து போகாமல் இருக்கவும் தன்னடக்கத்தை வளர்க்கவும் வழிபாடு பயன்படுகிறது.
மன ‍அழுத்தம், மன இறுக்கத்தைக் குறைக்கத் தியான முறைகள் பயன்படுகின்றன! எத்தனை எத்தனை வகையான தியான முறைகள்! அவற்றுக்கு உலகெங்கும் இன்று எவ்வளவு பெரிய வரவேற்பு.
இப்படிக் காலம் காலமாக நமது மனநல வளர்ச்சிக்குப் பயன்பட்டு வந்த வழிபாடு, தியானம், தத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளின் இன்றைய அறிவியல் வடிவம்தான் உளவியல். இன்றைய உளவியல் வல்லுநர்கள் ‍நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு நிற்பதில்லை.
இன்றைய அவசர உலகில், உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உறவுகள் சிதைவடைந்து வாழும் பலருக்கும் உளவியல் மருத்துவம் செய்கிறது. ‍அத்தோடு ஆலோசனையும் கூறி வழிகாட்டுகிறது.
குடும்கச் சிக்கல்கள், கனவன், மனைவி, குழந்தைகளின் உறவு மேம்பட உதவி! அலுவலக மன உளைச்சலிலிருந்து விடுபட வழிமுறைகள்! முதியவர் மனநலப் பயிற்சிகள்! மாணவர், தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சிகள்!
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உளவியல் வழி காட்டுகிறது!
ஆன்மீகவாதிகள் பலரும் இன்று இந்த உளவியல் நெறிகளுடன் கலந்து நமக்கு வழிகாட்ட முன் வருகிறார்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் மனநலம் முக்கியம். ஆன்மீக வழியிலோ, உளவியல் வழியிலோ அல்லது .இரண்டும் கலந்த வழியிலோ, நமது மன நலத்தைப் பேணி வளர்த்துக் கொள்வோம்.
நம் மனநலத்தைப் பேணி வளர்ப்பது எப்படி? நல்ல கேளிவிதான்! இதற்கு விடை தேடும் முன்னால் ‍வேறொரு கேள்வி!
நமக்கு வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா?

15 December 2010

நமது வாழ்வின் வெற்றிக்குப் புத்திசாலித்தனம் (I.Q) மட்டும் போதுமா? வேறு என்ன பண்புகள் வேண்டும்?

          நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றுவதைவிடச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு வெற்றி பெறுவதுதான் சிறந்தது என்று பார்த்தோம். சரிதான்!
நாம் சூழலை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கேற்ப நம்மை எப்படி மாற்றிக் கொள்வது? எப்படிச் செயல்படுவது? எப்படி வெற்றி பெறுவது?
நாம் நம் ஒவ்வொருவரையுமே ஒரு தேருக்கு ஒப்பிடலாம். அந்தத் தேரை மூன்று குதிரைகள் ஒன்றுகூடி நகர்த்துகின்றன.
ஒன்று அறிவு, புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை.
நாம் எந்நதத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்றாலும், அதற்குரிய அறிவு வேண்டும்.  இதுதான் நமது தேருக்குத் தேவையான முதல் குதிரை.craft3horse-01
ஆனால் அறிவுடையவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுகிறார்களா? எத்தனையோ புத்திசாலிகளின் வாழ்க்கை படுதோல்வியில் முடித்திருக்கிறது.
நெடுங்காலமாக அறிவை (Intelligence) மட்டும்தான் ஒருவரது வெற்றிக்கு அடிப்படை என்று கருதி வந்தார்கள். நம் ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையை அளப்பதற்கும் முயன்றார்கள். அறிவுக்கூர்மைக் கோவை(Intelligence Quotient (or) IQ) என்று குறியீட்டையே இதற்காக உருவாக்கினார்கள்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் வெற்றி வாய்ப்புகளையும் இந்த IQவை வைத்து அளந்துவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் நடக்கவில்லை.
கடந்த முப்பது வருடங்களில் நம்முடைய அ‍றிவுக்கூர்மையைவிட, நம்முடைய உணர்வுப் பக்குவம், நாம் வெற்றி பெறப் பெரிதும் பயன்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நம்முடைய குறைநிளைகளோடு நாம் நம்மையே ஏற்றுக்கொள்கிறோமா? நம்மீதே நம்பிக்கை இருக்கிறதா? ‍கோபம், பயம் போன்ற உணர்வுகளை நம்மால் வெற்றி கொள்ள முடிகிறதா?
மற்றவர்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம்? பழகுகிறோம்? போட்டி என்று வரும்போது அதை எப்படி நளினமாகக் கையாள்கிறோம்?
இவையெல்லாம் நமது வெற்றி வாய்ப்பை நிச்சயம் மாற்றுமல்லவா? அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள்! நல்ல பிள்ளை பிழைத்துக் கொள்வார் என்றெல்லாம் உணர்வுப் பக்குவம் நிறைந்தவர்களை நாம் பாராட்டுகிறோம்! வரவேற்கிறோம்!
இந்த உணர்வுப் பக்குவம்தான் நமது வெற்றித் தேரின் இரண்டாவது குதிரை.  இதைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. அறிவுக் கோவையைப் போல (IQ) உணர்வுக் கோவையை (Emotional Quotient- EQ) மதிப்பிடும் உத்திகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அறிவும், மற்றவர்களுடன் உறவாடும் பாங்கும் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? வெற்றிப் பாதையைத் திட்டப்படி அடைய விடாமுயற்சி வேண்டுமல்லவா? எடுத்த காரியத்தை முடிவு வரை தொடரும் திறன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் திறன், இவையெல்லாம் வேண்டுமே!
இந்த விடாமுயற்சிதான் நமது வெற்றித்தேரின் மூன்றாவது குதிரை. விடாமுயற்சிக் கோவை (Persistence Quotient-PQ) என்று இதை அழைக்கிறார்கள். நமது வெற்றித்தேர் நன்றாக ஓட வேண்டுமானால் அறிவுக்கூர்மை, உணர்வுப் பக்குவம், விடாமுயற்சி ஆகிய மூன்று குதிரைகளையும் நாம் நன்றாக வளர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று குதிரைகளையும் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்

03 December 2010

நமது சூழலைப் புரிந்து கொண்டு, எப்படி அதற்கு ஏற்றபடி வாழ்வது? நமக்கு ஏற்றபடி சூழலை மாற்ற முயல்வது? எது சரியானது?


வாழ்க்கை எனும் ஓடம்,  வழங்குகின்ற பாடம்! மானிடரின் வாழ்வினிலே மறக்கவொண்ணா வேதம்!
ஒரு பழைய படப்பாடல் வரிகள்... கண்ணதாசன் வரிகளா?
‍தெரியவில்லை! ஆனால் நம் வாழ்வைப் பற்றிய பல உண்மைகளைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு பயன்படும்! ஓடம் என்பது சிறிய படகு! பெரும்பாலும் ஒருவரோ, மிகச்சிலரோ ஓட்டிச் செல்லக்கூடியது!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டிச் செல்ல வேண்டும்! நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு தனிப்படகு, எங்கோ எப்போதோ தொடங்கிப் பயணம் செய்து, எப்போதோ முடியப்போகிற அல்லது மூழ்கப்போகிற ஒரு படகு!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டியாக வேண்டும்! எப்படி ஓட்டுகிறோம்? எதை நோக்கி ஓட்டுகிறோம்? எவ்வளவு விரைவாக ஓட்டுகிறோம்? என்பதெல்லாம் நம்கையில்தான்.
ஆனால் அடிப்படையாக ஒன்றை நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்! ஓடம் அல்லது படகுதான் நம்கையில் இருக்கிறது. நம் வாழ்வு மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அதை நாம் எப்படியும், எந்தத் திசையிலும், எந்த வேகத்திலும் ஒட்டலாம்!
அதுமட்டுமன்று! நம்மைப்போன்ற பல ஓடக்காரர்கள் அ‍தே ஓடையில் தங்கள் வாழ்க்கைப் படகை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிப் பயணம் செய்யும் இவர்கள் கூட எப்படித் தங்கள் ஓடங்களை ஓட்ட வேண்டும் என்று நாம் கட்டளை போட முடியாது. அவரவர் போக்கில் அவரவர் பயணம்!
இந்த ஓடங்களுக்கு நடுவில்தான் நாம் பயணம் செய்தாக வேண்டும். இப்பின்னனில் நம்முடைய வாழ்க்கைப் படகை நாம் எப்படி ஓட்டுகிறோம்?
நாம் ஓவ்வொருவரும் ‍எப்போதும் ஒரே மாதிரி நம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதில்லை. சில நேரம் வேகம், சில நேரம் சோர்வு இது இயற்கைதான்.  ஆனால் பெரும்பாலும் நம் வாழ்க்கை ஒரு பழக்கமான வழித்தடத்தில்தான் நகர்த்துகிறோம்.
பலரும் தங்கள் வாழ்க்கையை ஓடையின் போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள்! விதி விட்ட வழி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறார்கள்!
சிலர் ஓடையும் காற்றும் சரியாக வரட்டும்... ஓடையில் மற்றப் பகுதிகளின் கூட்டம் குறையட்டும்... அமைதியான சாதகமான சூழல் உருவாகட்டும்... அதற்குப் பிறகு பயணம் செய்யலாம் என்று கரையில் ஒதுங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்! அலை ஓய்ந்தபின் குளிக்கப் போகறிவர்கள் இவர்கள். அலை எப்போது ஓய்வது? இவர்கள் எப்போது வாழ்வாங்கு வாழ்வது?
சிலர் படுவேகமாகப் பயணம் செய்ய முயல்கிறார்கள். ‍அதிவேகமாக முன்னேறுகிறார்கள்! பல சமயங்களில் பெரும் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஓடை இவர்களின் ஓடத்தையே கவிழ்த்து விடுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல எதிர்பாராத சூழல்களையும், வெள்ளங்களையும், புயல்களையும் சமுதாய ஓடை கொண்டு வரக்கூடும். ‍அதிக வேகம் அதிகமான விபத்துக்களுக்கும் இடமளிக்கும்.
சிலர் தங்கள் வாழ்க்கைப் படகு எந்தப் பக்கம், எப்படிப் போகவேண்டும், என்றெல்லாம் கனவு காண்பார்கள். திட்டம் போடுவார்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கைப் படகை, அப்பா, அம்மா, ஆசிரியர், நண்பர்கள், குடும்பத்தினர் என்று மற்றவர்கள் எல்லாம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  அவரவர் சுமையை அவரவர் சுமந்தால் போதாதா? மற்றவர்களையே சார்ந்திருப்பவர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்? சிலர் தத்தம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதை விட்டுவிட்டு மற்றவர்களைத் திருத்தவும் வழிகாட்டவும் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள்! ஊருக்காகப் போராடுகிறேன் என்று சொல்லிப் பலநேரம் தங்கள் வாழ்க்கைப் படகையே கவிழ்த்து விடுவார்கள்!
வேறு சிலர் மற்ற வாழ்க்கைப் படகுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், தங்கள் சுயநலம் ஒன்றையே மையமாக வைத்து முன்னேறுவார்கள். இந்தச் சுயநலமிகளுக்கு நட்புக் குறையும்! பகைமை பெருகும்! காலப்போக்கில் இவர்கள் பகைமைப் புயலில் சிக்கித் தவிப்பார்கள்.
மிகச் சிலர்தான், சமுதாய ஓடையின் நெளிவு சுளிவுகளை நன்றாகப் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் படகையும் செம்மையாக வழிநடத்தி, தங்களைச் சுற்றி இருப்பவர்களையும், சார்ந்து இருப்பவர்களையும் அரவணைத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கை ஓடத்தில் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைப் பயணமும் அப்படிப்பட்டதாக அமைய வேண்டுமா?

15 November 2010

ஆசை, துன்பத்துக்கு அடித்தளமா? வளர்ச்சிக்கு வித்தா? ஆசைப்படுவது சரியா? தவறா?



மகிழ்ச்சி என்பது யாருக்குக் கிடைக்கிறது?pilab பணக்காரர்களுக்கா? மனநிறைவோடு வாழும் ஏழைகளை நாம் பார்க்கவில்லையா? படித்துப் பட்டம் வாங்கியவர்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? படிக்காதவர்கள்கூட எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே!
எல்லா வயதிலும், தரத்திலும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் ஏக்கப் ‍பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.      ஏன்? பலர் மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதில்லை! நமக்குள்ளேயே இயல்பாக மலர்வது.
உண்மையில் மனநிறைவுதான் மகிழ்ச்சி! நேற்றைய இழப்புகளையும், ‍தோல்விகளையும் பற்றிக் கவலைப்படாமல் வாழப் பழகுவதுதான் மகிழ்ச்சி!
மற்றவர்களிடம் இருப்பதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஏங்காமல், நமக்கு இன்று இப்போது இருக்கும் சுகங்களை அனுபவிப்பதுதான் மகிழ்ச்சி! ஏன் இன்றைய துக்கங்கள்கூடத் தற்காலிகமானவைதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் மகிழ்ச்சி!
உண்மையில், ஆசை கூடாதா? ஆசையே இல்லாமல் வாழ முடியுமா? ஆசையே இல்லாமல் நாம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்க முடியுமா?
வாழ்வின் அடித்தளமே ஆசைதான்! ஒவ்வொரு நொடியும் நாம் இன்னும் சிறப்பாக வாழவேண்டும் என்கிற ஆசைதான் நம்மை இயக்குகிறது!
இன்னும் ஒருபடி மேலே! இதுதான் தனிமனித வளர்ச்சிக்கே அடித்தளம்.
இந்த ஆசைக் கனவுகள்தான் இன்று நமது உடனடித் தேவை
இதைத்தான் இன்றைய குடியரசுத் தலைவர் தொடங்கி, உளவியல் வல்லுநர்கள் வரை பலரும் வலியுறுத்துகிறார்கள்!
எனவே மனநிறைவும் ஆசைக்கனவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல! எதிரானவை அல்ல!
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்போம். அதே நேரத்தில் இதைவிடச் சிறப்பான வாழ்வைப்பெற ஆசைப்படுவோம். இன்னும் செழிப்படைய கனவும் காண்போம்!
மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் இது!

09 November 2010

டீம் வீவர் காலவதியாகும் பிரச்சனையில் இருந்து விடுபட ...


How To Reinstall Teamviewer After It Has Expired ?



1. First uninstall the copy of Teamviewer from your system. This can be done with free uninstallers or by using Window’s default ‘Add or remove‘ program which can be found at: ‘Start’ –> ‘Settings’ –> ‘Control Panel’
2.Click on Start –> Run –> type %appdata% –> delete TeamViewer folder and also delete “C:\\Program Files\\Teamviewer
3. Delete registry folder: hkcu/software/teamviewer & hklm/software/teamviewer
4.Change MAC by RightClick on MyComputer -> Manage -> Device Manager -> Network Adappters -> Right Click on you NIC , choose Properties -> Advanced -> Click Choose “Network Address” -> Type 12digit in Value box (Ex : 001A3F25454E) -> OK
5.Disable and Enable you NIC in Network Connections . Now your MAC was changed.

***Re setup Teamviewer and Enjoy it now***


03 November 2010

வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நா‍மே சுவையாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி

பாகற்காய் கசக்கும்தான்! ஆனால் அ‍தை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். பாகற்காயின் மருத்துக் குணங்களுக்காக அல்ல! கசப்பைச் சுவைப்பவர்களே ஏராளம். சர்க்கரை இனிப்புதான்! ஆனால் இனிப்பை வெறுப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தங்களுக்குச் சர்க்கரை நோய் இருப்பதால் இனிப்பை வெறுப்பவர்களைச் சொல்லவில்லை! இனிப்புச் சுகையே பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை கசக்கிறதா? இனிக்கிறதா? என்ற கேள்விக்குரிய பதிலும் இப்படிப்பட்டதுதான். ‍ஒரே வகுப்பு! ஒரே பாடம்! சிலருக்குப் பாடம் பிடிக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை! காரணம் பாடமா அல்லது படிப்பவரின் மனநிலையா? பலர் தேர்வை எழுதுகிறார்கள். முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே என்று பலர் அழுகிறார்கள்! கடைசி வரிசையில் பலர் வழக்கம் போல் சிரிக்கிறார்கள். காரணம் மதிப்பெண்களா? மனநிலையா? கடன் ஒரு பெரிய வாழ்க்கைச் சுமைதான். என் நண்பர் ஒருவர் பல சகோதரிகளுக்கு மணம் முடித்துத் தந்தையாய் நின்றவர். கடன் சுமையில்லா நாளில்லை! ஆனால் எப்போதும் மகிழ்ச்சிப் புன்னகை. "கடன் சுமையைச் சுமப்பதே ஒரு சுவையாகிப் போய்விட்டது" என்கிறார்! மகிழ்ச்சியாக வாழும் ஏழைகளும் உண்டு! சோகத்தில் மூழ்சியிருக்கும் பணக்காரர்களும் உண்டு! படித்த ஏமாளிகளும் உண்டு! படிக்காத மேதைகளும் உண்டு! வாழ்க்கை சுவையா, சுமையா என்பது நாம் எங்கே எப்படி இருக்கி‍றோம் என்பதைப் பொறுத்தது அன்று! நமது சூழல் நமக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்ததும் அன்று! வாழ்வின் சுவையும் சுமையும் நமக்கு வெளியே இல்லை! அது நமக்குள்ளே இருக்கிறது! சுவைக்க தெரிந்த மனிதருக்கு வாழ்க்கை கரும்பு! சுவைக்கத் தெரியாத மனிதருக்கு அதுவே கற்பாறை! வாழ்க்கை சுவையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது சுவையானதுதான். அதுவே சுமையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் சுமையானதுதான். வாழ்க்கை சுமை என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் (Negative Thinking) எதிர்மறைப் பார்வை (Negative Outlook) என்பார்கள். இந்தப் பார்வை உடையவர்கள் தங்களையே நம்ப மாட்டார்கள். துணிச்சலாகப் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள். முன்னேறுபவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள், குமுறுவார்கள், மற்றவர்களையும் நம்ப மாட்டார்கள்! இவர்களுக்கு நல்ல உறவும் நட்பும் குறைவாகவே இருக்கும். மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை இவர்களைப் பற்றிக் கொள்ளும். மன இறுக்கம் தொடர்பான இரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இவர்களைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வாழ்க்கை சுவை என்று கருதுபவர்களை நாம் நேர்வழிச் சிந்தனையாளர்கள் (Positive Thinkers) என்கிறோம். இவர்கள் எப்போதும் புன்னகையோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தயங்காமல் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள். தோல்வியைக் கண்டு கலங்க மாட்டார்கள். தங்கள் முயற்சிகளில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எல்லா பக்கங்களிலும் நட்பும் உதவியும் காத்திருக்கும். மிகக்கடுமையான நோய்கள்கூட இவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்காது! இத்தகைய மனநலம் அதிசயிக்கத் தகுந்த உடல் நலத்தைக் கொடுப்பதும் உண்டு. நமக்குத் தேவை வாழ்வு சுமை என்கிற சரிவுப் பார்வை அன்று! வாழ்க்கை சுவை என்கிற உயர்வுப் பார்வைதான்!

29 October 2010

பள்ளிக்கூட ஜோக்ஸ்...



ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!



***********************************************************************************
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.

மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...

ஆசிரியர்: ?????

ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம் போது இ‌ப்படி எ‌ல்லா‌ம் சொ‌ல்‌லிடா‌தீ‌ங்க.. 

பாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.

நல்லா பாத்து எழுதிட்டு வாடா.

சரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்



***********************************************************************************
நா‌ன் ஒ‌வ்வொரு பொருளாக‌ச் சொ‌ல்லு‌ம் போது அது எ‌ன்ன வகை எ‌ன்று சொ‌ல்ல வே‌‌ண்டு‌ம்?

ஆ‌சி‌ரிய‌ர் - த‌ண்‌ணீ‌ர் 
மாணவ‌ன் - ‌திரவ‌ம்
ஆ‌சி‌ரிய‌ர் - மாடு 
மாணவ‌ன் - ‌வில‌ங்கு 
ஆ‌சி‌ரிய‌ர் - தே‌ள்
மாணவ‌ன் - ‌‌திரவ‌ம் 
ஆ‌சி‌ரிய‌ர் - எ‌ன்ன தேள் ஒரு திரவப் பொருளா எப்படி?
மாணவ‌ன் - அது தான் ‘கொட்டுமே’.




27 October 2010

பனி மூட்டங்களா? பாறைகளா?

            ஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை.  எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனாலும் இவையெல்லாம் TIMEஉண்மையான குறைபாடுகள்! வாழ்வின் எதார்த்தம்! போலிகள் அல்ல!
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும் பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்? ஏமாற்று வித்தைகள்?
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
‍‍‍ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்? எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்?
நம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்!
இந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!

25 October 2010

நம் வாழ்வு யார் கையில்..

       நடந்து போகும்போது கீழே விழுகிறோம். ஏன் என்று கேட்கிறார்கள்? என்ன சொல்வோம்?
கல் தடுக்கி விட்டது என்கிறோம்.  கல் மீது தான் பழி, நான் கல்லைக் கவனிக்காமல் இடறி விழுந்தேன் என்று சொல்கிறோமா? நாம் பொறுப்பை ஏற்கிறோமா?
சமையல் சரியில்லை. ஏன்? உப்பு கூடிவிட்டது என்கிறோம்.  நான் உப்பைக் கூடுதலாகப் போட்டு விட்டேன் என்று சொல்வதில்லையே!
மாணவர் தேர்வில் தோற்கிறார்.  ஏன்? வினாத்தாள் கடினமாக இருந்தது என்கிறார். நான் சரியாகப் படிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதில்லை. 
இரண்டு வகைப் பதில்களும் ஒன்றுதானே என்று சிலர் நினைக்கலாம். இல்லை!
முதல் வகை பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சி.  தவறுகளை, குறைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதன் வெளிப்பாடு!
நான் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்கிறேன்.  எனக்கு எப்போதும் இப்படித் துன்பமே வருகிறது என்று புலம்புவதற்கு அடித்தளம்! வாழ்வில் தொடர்ந்து சரிவுகளைச் சத்திக்கும் வழித்தடம்.
சின்னச் சின்னத் தவறுகளுக்குக்கூட நாமே பொறுப்பேற்றுக் கொள்ளப் பழகுவோம்! ஒவ்வொரு சிறு சிறு தவறையும் திருத்திக்கொள்ள வழி இருக்கிறது.
படிப்படியாக நமது பலவீனங்கள் குறையும்.  பலங்கள் பெருகும். மெல்ல மெல்ல நாம் உயர வழி கிடைக்கும்.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும்கூட இந்த இருவகை மனப்போக்கையும் பார்க்கலாம்.
சிலர் எப்போதும் புலம்புவார்கள்.
நான் மட்டும் கொஞ்சம் வசதியாகப் பிறந்து இருந்தால்..
என்னை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படிக்க வைத்திருந்தால்...
அந்த வேலை மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...
என் மனைவி மட்டும் கொஞ்சம் உருப்படியாக வாய்த்திருந்தால்..
இப்படிப்பட்ட சிந்தனைகளே நமது தோல்வியை ஒப்புடக கொள்வதின் அடையாளம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்று சொல்லும் வாக்குமூலம்!
நம் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழிபோடும் முயற்சியின் வெளிப்பாடு மற்றவர்கள் கையில் நம் வாழ்வை ஒப்படைக்கும் அவலத்தின் அடையாளம்.
நமக்குள்ளே இறைவன் தந்திருக்கும் அந்தப் பேராற்றலை நம்பாமல் ஏற்றுக்கொள்ளாமல், பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிட்டுப் பரிதவிக்கும் ஏமாறித்தனம்.
கடைசியில் நம் தோல்விக்குக் கடவுள்மீது பழிபோடும் அறியாமை! எனவே நம்முடைய வாழ்வு, நமக்குக் கி‍டைத்திருக்கும் ஒரு கொடை. மிகப்பெரிய வாய்ப்பு. அதை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டாம்.
நம் வாழ்வுக்கும், நம் வெற்றிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்வோம்.
குறைகளை ஏற்றுக்‍கொள்வோம்... திருந்துவோம்.. முன்னேறுவோம் நம்முடைய தோல்விக்கும் குறைகளுக்கும் மற்றவர்கள்மேல் பழிபோடும் வழக்கத்தை இன்றே விட்டொழிப்போம்.

15 October 2010

Happy Durga Puja...





I Really Missing this Durga Puja  ( Kolkata ) 

13 September 2010

சங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )-2



கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

 
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

**********
 புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
 பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

 
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
*********
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-
ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

 
 

10 September 2010

சங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )

உன் பெயரைக்கூட 
நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை 
உன்னை குத்திவிடுமோ என்று.. 
இப்படிக்கு
 Spelling
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

*       *     *       *
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
 
 இப்படிக்கு
 
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்

*       *     *       *
அனுமதி கேட்க்கவும் இல்லை...
 
அனுமதி வழங்கவும் இல்லை...
 
ஆனால்
 
பிடிவாதமாக ஒரு முத்தம்..
  "
கன்னத்தில் கொசுக்கடி"

 
இப்படிக்கு
         
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
 

02 September 2010

18 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுகோளும்.....

ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!

இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.

சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!

நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!



சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தோழரும் உங்களது கண்டணங்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!, தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் தருமி ஐயாவிற்கும் நன்றி! 


 

16 August 2010

வாழப் பழகுவோம்


   ஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை. எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனாலும் இவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்! வாழ்வின் எதார்த்தம்! போலிகள் அல்ல!
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும் பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்? ஏமாற்று வித்தைகள்?
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
‍‍‍ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்? எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்?
நம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்!
இந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!

23 July 2010

நமக்குள்ளே ஓரு பேராற்றல்

          இந்த உலகையும், உலக இயக்கங்களையும், ஏன் பேரண்டத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது.
அதை நாம் கடவுள் என்றோ, இயற்கை என்றோ, அல்லா என்றோ, சிவன் என்றோ... எந்தப் பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  ஆனால் எந்தப் பெயருக்குள்ளும் அதை அடக்கிவிட முடியாது.
எந்தச் சமய நெறியைப் பின்பற்றியும் அந்தப் பேராற்றலை அடைய முடியும். ஆனால் எந்தச் சமயத்தின் வரையறைக்குள்ளும் அதை அடிக்கிவிட முடியாது.
மெளன மொழி தொடங்கி எந்த மொழி வழியும் கடவுளை நாம் அடைய முடியும். ஆனால் எந்த ‍மொழிக்குள்ளும் அதை அடைத்து வைத்து விட முடியாது.
06102008242நம்மால் இன்னும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாத பழமையான காலம் தொட்டு இந்தச் பெருஞ்சக்தி இயங்கிவருகிறது.  ஆனால் எந்த வகையான பழமைவாத மூட நம்பிக்கைகளுக்குள்ளும், போலித் தனங்களுக்குள்ளும் அதை அடக்கி வைத்து விட முடியாது.
காலந்தோறும் மாற்றங்களுக்கு இடம் தந்து புதுப்புது அர்த்தங்களுடன் புதுப்புது பரிமாணங்களை வெளிக்காட்டி உயிர்த்துடிப்புடன் இருப்பதுதான் இறையாற்றல் - பேராற்றல்.
ஒவ்‍வோர் உயிரும், உயிர்த்துடிப்பும் இந்த உயிர்ப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.  நாமும் இந்தப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஓர் அங்கமாக மாறி ஒன்றுபட்டுச் செயல்படும்போது, புதுப்புது வளர்ச்சியாக... முன்னேற்றமாக...கண்டுபிடிப்பாக...இப்பேராற்றல் வெளிப்படுகிறது.
இந்த மனிதநேய நெறியைத்தான் ஆன்மீக வளர்ச்சிப் பாதையாக்கக் காலம் காலமாக எல்லாச் சமயங்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றன.
நமக்குள்ளிருக்கும் இந்த உள்ளொளியைப் புரிந்து கொண்டு முறையாகப் பயன்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
இன்றைய அறிவியல், உளவியல் கருத்துக்களும் இன்று இ‍தை உறுதிப்படுத்துகின்றன.
"நமது உடல் நோய்கள் பலவற்றுக்கும் நமது மன அழுத்தமும் எதிர்மறைச் செயல்களுமே காரணம் என்று மருத்துவம் சொல்கிறது.  எனவே நம்முடைய மனநிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனறு இன்றைய மருத்துவம் சொல்கிறது.
தன்னம்பிக்கையும் நேர்வழிச் சிந்தனைகளும் இரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல உடல் நோய்களைக் குணமாக்க முடியும் எனறு இன்று மருத்துவ உலகம் ஒப்பைக்கொள்கிறது.
வழிபாடு, விரதம், தியானம் போன்ற முயற்சிகள் உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் வழி சேர்க்கின்றன. எனவே மாத்திரைகளோடு இந்த உத்திகளையும் இன்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்."
நோயை வெல்வதில் மட்டுமன்று வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதில்கூட இந்த அகத்தூண்டுதல் பயன்படும். தன்னம்பிக்கையோடு நேர்வழியில் சிந்தித்து, நேர்வழியிலேயே உறவாடி ‍நேர்விழயிலேயே செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் இன்றைய உளவியலின் சாரம்.